அரசியல் இலங்கை செய்தி

அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவில் விமல்வீரவன்சவின் சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தவில்லை.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவரின் போராட்டம் தொடரட்டும்.” எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

தனது போராட்டம் வெற்றியளித்துவிட்டதாகக் கூறி சத்தியாகிரகப் போராட்டத்தை விமல்வீரவன்ச நேற்று நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!