உலகம்

குயின்ஸ்லாந்தில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு பாடசாலை சார்ந்த ஊழியர்களால் 20,833 முறைப்பாடுகள் தொழில் வன்முறை சம்பவங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது 2022 இல் 5,748 ஆக இருந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிஸ்பேனின் (Brisbane) தெற்கு மற்றும் குயின்ஸ்லாந்து (Queensland) ஆகிய பகுதிகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் டேவிட் கிரிசாஃபுல்லி (David Crisafulli) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாம் சிறந்தவர்களை ஈர்க்க வேண்டும். சிறந்தவர்களை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதைச் செய்ய, ஆசிரியர்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!