இலங்கையின் பேரிடர் மீட்பு முயற்சிகளுக்கு ஐ.நா. பாராட்டு
பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர (ஓய்வு) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை (UN) வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சை சந்தித்து, பேரிடர் மீட்பு முயற்சிகள், நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தார்.
ஐ.நா. ஒருங்கிணைப்பாளர், இலங்கை மக்கள் காட்டிய தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மைக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதைய மீட்பு நடவடிக்கைகள் கடந்த கால குறைபாடுகளிலிருந்து ஒரு தீர்க்கமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும், ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறைக்கு திருப்புமுனையாகும் என்றும் துணை அமைச்சர், கூறினார்.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்ட திருத்தங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைத்தல், வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதிகாரிகளுக்கு மையப்படுத்தப்பட்ட கட்டளை அமைப்பை வலுப்படுத்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பாக ஐ.நா. மற்றும் சர்வதேச பங்காளர்களின் தொடர்ச்சியான உதவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்த, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தற்காலிக சேமிப்பு வசதியை உருவாக்க முன்மொழிந்தார்.





