போண்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் – இஸ்லாமிய சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட தாக்குதல்தாரிகள்!
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் கடந்த மாதம் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.
அவர்களின் பயணத்திற்கான காரணங்களை வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய அரசின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களில் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு இஸ்லாமிய அரசின் கொடிகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





