ஜேர்மனி வேலைவாய்ப்புகள் – அதிக தேவை உள்ள 06 தொழில்கள்!
உலக நாடுகள் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான போக்கை பின்பற்றி வரும் நிலையில் ஜேர்மன், வெளிநாட்டவர்களை வரவேற்கிறது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் குடியேற்றக் கொள்கைகள கடுமையாக்கி வருவதால் புலம்பெயர்வு தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போது மனக்கவலைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஜேர்மன் உலகளாவிய தொழில்முனைவோர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. அங்கு வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையர்களுக்கும் கேள்வி உள்ளதாகவும் தெரிவிகப்படுகிறது. ஜேர்மனில் முக்கியமாக 06 தொழில்களுக்கு தற்போது அதிக தேவையுள்ளது.
தற்போது அங்கு 02 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளுக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியின் வெளிநாட்டு அலுவலகத்தின் Official website ஆனா Deutschland.de வெளியிட்ட தகவலின்படி இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொறியாளர்கள் (Engineers), தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (IT specialists), செவிலியர்கள் (nursing), கைவினைஞர்கள் (craftsmen), போக்குவரத்து நிபுணர்கள் (transport specialists), இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் பசுமை வேலைகள்(Natural scientists and green jobs) ஆகிய துறைகளில் அதிக தேவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியாளர்கள் (Engineers)
Industry 4.0 மாற்றத்தால், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் வளர்ச்சியில் Engineers இன் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
இந்த மாற்றத்தால் பொறியாளர்கள் முன்னணியில் உள்ளனர்.
நிறுவனங்கள் சிறந்த அமைப்புகளை வடிவமைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை ஒருங்கிணைக்கவும் உதவுகின்றன.
பாரம்பரிய தொழில்கள் நவீனமயமாக்கப்படுவதால், பொறியியல் நிபுணத்துவம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (IT Specialists)
ஐரோப்பாவில் IT தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான
மிகப்பெரிய சந்தையைக் கொண்ட ஜேர்மன், குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப திறமை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சுமார் 1,49,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சைபர் பாதுகாப்பு (Cyber security), மென்பொருள் மேம்பாடு (software development), தரவு பகுப்பாய்வு (data analysis) மற்றும் இணைய நிர்வாகம் (network administration) போன்ற துறைகளில் அதிக தேவை காணப்படுகிறது.
செவிலியர்கள் ( Nursing professionals)
மக்கள் தொகையில் முதியோர் அதிகரிப்பு காரணமாக, சுமார் 35,000 செவிலியர்
பணியிடங்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நர்சிங் நிபுணர்களுக்கு விசா மற்றும் அங்கீகார நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வயதான மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் ஆயுட்காலம் ஜெர்மனியின் சுகாதார அமைப்பில்
பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள் தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கு செவிலியர் நிபுணர்கள் தற்போது அதிகமாக தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அதிகமாக வரவேற்படுகின்றனர்.
கைவினைஞர்கள் (Craftsmen)
ஜெர்மனியின் புகழ்பெற்ற மிட்டல்ஸ்டாண்டின் முதுகெலும்பாக, அதன் நடுத்தர நிறுவனங்களின் வலையமைப்பு
திறமையான வர்த்தகர்களால் இயக்கப்படுகிறது.
அவர்களின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், கைவினைத் துறையில் பல பாத்திரங்கள் நிரப்பப்படாமல்
உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஜேர்மனில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களில் 29 சதவீதம் பேர் திறமையான வர்த்தகங்களில் உள்ளனர்.
ஆனால் இன்னும் அதிகமான எலக்ட்ரீஷியன்ஸ், மெக்கானிக்ஸ்,கார்பென்டர்ஸ் (Carpenters) மற்றும் பிளம்பர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த தேவை நிலையானதாக மட்டுமின்றி வளர்ந்தும் வருகிறது.
போக்குவரத்து நிபுணர்கள் (Transport professionals)
Logistics மற்றும் e-commerce வளர்ச்சி காரணமாக, சாரதிகள் மற்றும் போக்குவரத்து முகாமையாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ், கார், ரயில் மற்றும் கப்பல் போன்றவற்றில் நாடு முழுவதும் மக்களையும் பொருட்களையும் திறமையாக நகர்த்துவதற்கு தகுதிவாய்ந்த சாரதிகள் மற்றும் போக்குவரத்து முகாமையாளர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.
இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் பசுமை வேலைகள் (Natural scientists & Green jobs)
சுற்றுச்சூழல், உயிரியல், பசுமை ஆற்றல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஜேர்மனியின் Energiewende அதாவது எரிசக்தி மாற்ற திட்டத்துடன் இணைந்து,
பசுமை வேலைகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜேர்மனியில் நிலைத்தன்மை என்பது வார்த்தையாக மட்டுமின்றி, தேசிய நோக்கமாகவும் கருதப்படுகின்றது.
“பசுமை வேலைகள்” தற்போது போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி மற்றும்
எரிசக்தித் துறை உட்பட சுமார் அனைத்துத் துறைகளில் பங்கு வகிக்கின்றது.
ஜேர்மனியின் எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை இலக்குகளை முன்னேற்றுவதற்கு இந்தப் பாத்திரங்கள் மிகவும் முக்கியம்.
நிலைத்தன்மையில் ஆர்வமுள்ள நிபுணர்களுக்கு, தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியாளர் குழுவில் சேர்வதற்கு இதுவே சரியான தருணம்.
போட்டி குறைவு, சம்பளம் உயர்வு, வேலை நிலைத்தன்மையும் காணப்படுகிறது.
எதிர்வரும் 10 முதல் 15 வருடத்துக்கு ஜேர்மனியில் திறமையான வேலைவாய்ப்புகள் குறைவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
நன்றி
பாலகணேஷ் டிலுக்ஷா




