இஸ்ரேல் வீரர்களைத் தடை செய்த இந்தோனேஷியாவுக்கு நேர்ந்த கதி
இந்தோனேஷியாவில் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியையும் நடத்த இடமளிக்க கூடாது என சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகள் (International Sports Federations) கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற உலக கலைத்துவ ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டிகளில், இஸ்ரேலிய வீர வீராங்கனைகள் பங்கேற்க முடியாதவாறு இந்தோனேஷியா தடை விதித்தது.
இந்தத் தடையைத் தொடர்ந்தே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலை ஒரு பாரபட்சமான நடவடிக்கை எனக் கருதும் சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee), இந்தோனேஷியாவைத் தண்டிப்பதற்கான தீர்மானம் ஒன்றை தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.
ஒலிம்பிக் கொள்கைகளுக்கு முரணாக, விளையாட்டு வீரர்களை அரசியல் காரணங்களுக்காகத் தடுத்தமைக்காக இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இத்தகைய பரிந்துரை நிறைவேற்றப்பட்டால், எதிர்காலத்தில் உலகக் கோப்பை போன்ற முக்கியப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தோனேஷியா நிரந்தரமாக இழக்க நேரிடும்.
இந்தச் சம்பவம், விளையாட்டு நிகழ்வுகளில் அரசியல் தலையீட்டின் பின்விளைவுகள் குறித்து உலக நாடுகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.





