செய்தி

தைவானில் இறந்த ஊழியரிடம் மருத்துவ விடுப்பு கேட்ட விமான நிறுவனத்தால் சர்ச்சை!

இறந்த ஊழியரிடமிருந்து மருத்துவ விடுப்பு விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை கோரியமைக்காக தைவான் (Taiwan) விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

மிலனில் (Milan)  இருந்து தைவானின் (Taiwan) தாயுவான் (Taoyuan) சென்ற விமானத்தில் 34 வயதுடைய பணிப்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.

இந்நிலையில்   ஈவா ஏர் (Eva Air) விமான நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் செப்டம்பர் மாத இறுதியில் குறித்த பெண் மருத்துவ விடுப்பு கோரியதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு  மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் அவரின்  இறப்புச் சான்றிதழை அனுப்பிவைத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவரது மரணத்தால் “ஆழ்ந்த வருத்தம்” அடைந்ததாகவும், அவரது குடும்பத்தினரிடம் “ஆழ்ந்த மன்னிப்பு” கோருவதாகவும் குறித்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிகாரிகளும் விமான நிறுவனமும் அவரது மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன, அவருக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி