இலங்கை

இலங்கையில் கோர விபத்து – இளம் தம்பதி பலி

ஹொரணை-மொரகஹேன வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதிக்கொண்டதில் இளம் தம்பதியினர் உயிரிழந்ததாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் லொறியும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

வளைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் பலத்த காயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!