Womens WC – பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில் இன்று இலங்கையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.





