இலங்கை

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றவருக்கு நேர்ந்த கதி

பாத யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் மட்டக்களப்பில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக தங்கியிருந்த வேளை 74 வயதான குறித்த யாத்திரிகர் உயிரிழந்துள்ளதாக யாத்திரை மேற்கொள்ளும் ஏனைய யாத்திரிகர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.கைதடி பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு 60 யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 06 ஆம் திகதி பாத யாத்திரையை ஆரம்பித்திருந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!