ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது.

ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது.

இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வவுச்சர் மூலமாக இவர்கள் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கும், பட மாளிகைக்கு செல்வதற்கும் அல்லது சில காட்சிகளை பார்ப்பதற்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றுது.

இந்த 200 யுரோ வவுச்சரை டிஜிடல் முறையில் விண்ணப்பம் செய்ய முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!