இலங்கையில் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவர்

மீரிகம, ரேந்தபொல பகுதியில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நேற்று மதியம் இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறைத் தொடர்ந்து இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் ரேந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)