போலந்துக்குள் நுழைந்த ரஷ்யாவின் ட்ரோன்கள் – பாதுகாக்க விரையும் உலக நாடுகள்

போலந்துக்குள் ரஷ்யாவின் ட்ரோன்கள் நுழைந்த பிறகு நேட்டோ பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
நெதர்லாந்தும் செக் குடியரசும் பாதுகாப்பிற்கு உதவுவதாக தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 3 போர் விமானங்களை அனுப்பி போலந்து வான்வெளியைக் காக்கப் போவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
பிரான்ஸும் பிரித்தானியாவும் நேட்டோவின் கிழக்குப் பகுதிக்குப் போர் விமானங்களை அனுப்புவது பற்றியும் யோசிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் கசப்பை வெளியிட்டார். ஆனால் அதைப் பெரிதுபடுத்த அவர் விரும்பவில்லை.
முன்னதாக ரஷ்யாவின் சுமார் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து கூறியது தெரிவித்துள்ளது..
எனினும் தாம் போலந்தைத் தாக்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
(Visited 4 times, 4 visits today)