கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு – பொலிஸ் அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு துணை பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் கம்பஹா பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துணை ஆய்வாளர் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களாத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
பெக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோர் மேற்கு வடக்கு குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.