இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – பாட்டியின் கழுத்தை அறுத்து கொன்ற பேரன்

பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேர் தொடர்பில் வெளியாகியுள்ளது.

பாட்டின் உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்மணி, சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அத்துடன் தனது தாயாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, உடலை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

See also  இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்து PHI வெளியிட்ட அறிக்கை

சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content