மெக்சிகோவில் கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

தொடர்ந்து பெய்த மழையால் மெக்சிகோ நகரின் பிரதான விமான நிலையம் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.,
இதனால் லத்தீன் அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான பயண மையங்களில் ஒன்றான மெக்சிகோவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பெனிட்டோ ஜுவாரெஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள், அனைத்து விமானங்களும் நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்ட பின்னர், நண்பகலில் அனைத்து ஓடுபாதைகளும் மீண்டும் இயக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
விமான ரத்து, தாமதங்கள் மற்றும் மாற்றுப்பாதைகளால் சுமார் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மெக்சிகன் தலைநகரம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழைக்காலங்களில் ஒன்றை அனுபவித்து வருகிறது, இதனால் நகரத்தின் பிற பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தலைநகரில் கனமழை பெய்து வருவதால், இந்த வாரம் ஏராளமான ரத்துகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.