ஆசியா

தெற்கு தைவானில் பெய்த கனமழையால் நான்கு பேர் பலி; 5,900க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

தைவானில் பெய்த கனமழை காரணமாக நால்வர் உயிரிழந்து விட்டதாகவும் 5.900க்கும் மேற்பட்டோர் தஙகள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஓர் ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கடந்த ஒரு வாரத்தில் பெய்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இதன் விளைவாக நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டன.

ஜூலை மாத இறுதியிலிருந்து தைவானின் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மூவரைக் காணவில்லை, 77 பேர் காயமடைந்தனர்,

டானாஸ் புயலாலும் அண்மையில் பெய்த கனமழையாலும் தைவானின் தென்பகுதியில் உள்ள தைனான் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்களை தைவானியப் பிரதமர் சோ ஜுங் தாய் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) சந்தித்துப் பேசினார்.

நிவாரணப் பணிகளுக்குத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக தைவானிய அமைச்சரவை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content