பாகிஸ்தானில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

பாகிஸ்தானில் வடமேற்கில் பனிப்பாறை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த ஆண்டு இதே காலத்தை விட கனமழை பெய்து வருகிறது.
இதனால் பனிப்பாறை ஏரி வெடிப்பால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்து வானிலை ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அன்வர் ஷாஜாத் தெரிவித்தார்.
ஜூலை நடுப்பகுதியில் அதிகாரசபை அனுப்பிய கடிதத்தில், பிராந்தியத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் “தொடர்ச்சியான அதிக வெப்பநிலை பனி மற்றும் பனிப்பாறை உருகுவதையும் அதைத் தொடர்ந்து வரும் வானிலை நிகழ்வுகளையும் துரிதப்படுத்தக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கையை தொடர்ந்து மீட்புக் குழுக்கள் நாரானில் இருந்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றியதாக கைபர் பக்துன்க்வா சுற்றுலாத் துறையைச் சேர்ந்த டாக்டர் அப்துல் சமத் தெரிவித்தார்.