உலகம்

நைஜரில் பணியிடத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: ஒருவர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான டோசோவில் ஒரு கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார்.

“ஜூலை 15 அன்று நைஜரின் டோசோ பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒருவர் கடத்தப்பட்டார்.” என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content