ஐரோப்பா

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

ஈரானில் தயாரிக்கப்பட்ட 36 ஆளில்லா விமானங்களை உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் இருந்து ஏவப்பட்ட ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா  தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அனைத்து ட்ரோன்களையும் அழித்ததாகவும், மேற்கு பிராந்தியங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ வசதிகளை தாக்குவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டது என்றும் படை கூறியது.

உக்ரைனின் உள்விவகார அமைச்சின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ, இந்தத் தாக்குதலை “பாரிய” தாக்குதல் என்று விவரித்தார்.

கடந்த அக்டோபரில் இருந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய மாஸ்கோ, உக்ரைனில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கு ஆளில்லா விமானங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!