ஐரோப்பா

இலவசத்துக்கு ஆசைப்பட்ட கணவனால் வெளிநாட்டு சிறையில் வாடும் மனைவி

இணையத்தில் கிடைக்கும் சலுகைகள் மீது நாட்டம் கொண்ட சுவிஸ் நாட்டவர் ஒருவரால், அவரது மனைவி வெளிநாடொன்றில் சிறையில் வாடுகிறார்.

எலிசபெத்தும் பீற்றரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த ஓய்வு பெற்ற தம்பதியர். பீற்றருக்கு எப்போதுமே இணையத்தில் சலுகை விலையில் கிடைக்கும் பொருட்கள் மீது ஒரு ஆர்வம். ஆனால், அவரது இலவச ஆசை அவரது மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டது.2021ம் ஆண்டு, பீற்றருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருக்கு பல மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சொத்து கிடைக்க இருப்பதாகவும், கொலம்பியாவுக்கு இலவச பயணம் செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி | Swiss National Wife In Prison

பயணச்சீட்டுகள் முதல் தங்குமிடம் வரை அனைத்தும் இலவசம் என கூறப்பட, இலவச சுற்றுலா என்றதும், கண்ணை மூடிக்கொண்டு புறப்படத் தயாராகிவிட்டார் பீற்றர்.ஆனால், எலிசபெத்துக்கோ சந்தேகம். ஆனாலும், அடம்பிடித்து மனைவியையும் சம்மதிக்கவைத்து தன்னுடன் புறப்படவைத்துவிட்டார். இலவசமாக கொலம்பிய சுற்றுப்பயணம் சென்ற நிலையில், பீற்றர் தனது சொத்துக்களைப் பெறுவதில் ஒரு சிறு பிரச்சினை என்று கூறிய சுற்றுலா ஏஜண்ட், அவர்கள் ஐரோப்பாவுக்கு திரும்பிச் செல்லவேண்டுமென கூறியிருக்கிறார்.

See also  ஐரோப்பிய நாடொன்றில் அச்சுறுத்தும் வெப்பம் - வெப்பத்தை தானாகவே சீராக்கிக்கொள்ளும் வீடுகள்

இலவசத்துக்கு ஆசைப்பட்ட சுவிஸ் நாட்டவரால் வெளிநாட்டில் சிறையில் வாடும் மனைவி | Swiss National Wife In Prison

அதன்படி தம்பதியர் புறப்பட, அந்த ஏஜண்ட் பரிசுப்பொருள் ஒன்றைக் கொடுத்து, அதை தன் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிடுமாறு கூற, அதை எலிசபெத்தின் சூட்கேசில் வைத்திருக்கிறார்கள்.தம்பதியர் விமானம் ஏறி, விமானம் புறப்படுவதற்கு சற்று முன், பணிப்பெண் வந்து எலிசபெத்தை கொஞ்சம் வரமுடியுமா என அழைத்துச் சென்றுள்ளார்.விமானத்திலிருந்து இறங்கிய எலிசபெத்தை பொலிசார் கைது செய்துள்ளார்கள். காரணம், அவரிடம் அந்த ஏஜண்ட் கொடுத்த பரிசுப்பொருளுக்குள் மூன்று கிலோ போதைபொருள் இருந்திருக்கிறது.

மொழி தெரியாத இடத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் எலிசபெத்சுவிஸ் அரசின் தலையீட்டால் எலிசபெத் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், மார்ச் மாதம் வழக்கு விசாரணை துவங்க, அவருக்கு ஐந்து ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், 140,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அந்த தண்டனைக்காலத்தையும் வீட்டுச்சிறையில் கழிக்க அனுமதி கிடைக்குமா அல்லது சிறை செல்லவேண்டுமா என்பது தெரியாமல் காத்திருக்கிறார் அவர்.அவர் தன் கணவருடன் தற்போது தொடர்பிலில்லை. காரணம், அவரால்தான், தான் இந்த நிலையிலிருப்பதாக அவர் முழுமையாக நம்புகிறார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content