பாகிஸ்தானில் நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உள்பட 149 பேர் கைது!

பாகிஸ்தான் போலீசார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் இரண்டு இலங்கையர்கள் உட்பட 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் (NCCIA) தெரிவித்துள்ளது.
பைசலாபாத் நகரில் செயல்பட்டு வந்த இந்த நெட்வொர்க் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்ததாக அந்த நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த மையம் போன்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை சுரண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு வங்கதேசிகள், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு ஜிம்பாப்வே நாட்டவர் அடங்குவர்.
149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது.
மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் முதல் முதலீடுகளில் ஒரு சிறிய வருமானத்தைப் பெறுவார்கள் என்றும், பின்னர் பெரிய தொகையை ஒப்படைக்க வற்புறுத்தப்படுவார்கள் என்றும் போலீஸ் அறிக்கையின் நகல் கூறுகிறது.