இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

தாய்லந்தின் விமானத்தில் இருக்கைக்காக பயணி செய்த செயல் – வெளியேற்றிய ஊழியர்கள்

தாய்லந்தின் Lion Air விமானத்தில் பயணி ஒருவர் தனது இருக்கையை மாற்றிக் கேட்டு அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான ஊழியர் அவரை இழுத்துச்சென்று வெளியேற்றியுள்ளனர். கால்களை நீட்ட போதுமான இடம் வேண்டும் என்பதால் emergency exit பாதைக்கு அருகேயுள்ள இருக்கையில் உட்கார அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த இருக்கைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இருக்கையை மாற்றிக்கொடுக்க விமான ஊழியர் மறுத்தனர்.

அந்தப் பயணி தகராறு செய்ததை இன்னொருவர் காணொளியாக்கி X தளத்தில் பதிவிட்டார். இறுதியில் ஐவர் அவரை விமானத்திலிருந்து இழுத்துச்சென்று வெளியேற்றினர்.

அவர் அவ்வாறு நடந்துகொண்டதைக் கண்டித்த சக பயணிகள் அடம் பிடித்தவர் சுயநலவாதி என்று கூறினர்.

அந்தச் சம்பவத்தால் விமானம் புறப்பட ஒரு மணி நேரம் தாமதமானது. தொந்தரவு செய்யும் பயணிகளுக்குச் சில விமான நிறுவனங்கள் தண்டனை விதிக்கின்றன.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content