இலங்கை

85 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தல்

85 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

85 சீனப் பிரஜைகளும் இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல் – 880 விமானம் ஊடாக சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகளும் நாடு கடத்தப்படுவதற்காக வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சீனப் பிரஜைகளுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உட்பட சுமார் 172 அதிகாரிகள் சீனாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content