தைவானை சுற்றிப் பறந்த 50 சீன இராணுவ விமானங்களால் பரபரப்பு

சுற்றி 50 சீன இராணுவ விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில் 6 சீனக் கடற்படைக் கப்பல்களும் அந்த வட்டாரத்தில் காணப்பட்டதாகத் தைவானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கடற்படைக் கப்பல் தைவான் நீரிணையைக் கடந்து சென்ற 2 நாட்களில் சீனாவின் கப்பல்களும் விமானங்களும் அங்குத் தென்பட்டுள்ளன.
அண்மைக்காலமாகத் தைவானைச் சுற்றிய பகுதிகளுக்குச் சீனா அதிகமான கடற்படைக் கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பிவருகிறது.
தைவான் நீரிணை அனைத்துலகக் கடல் பகுதியில் அமைந்திருப்பதாக அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் கூறுகின்றன. ஆகவே அதில் பயணம் செய்வதற்கு அனைத்துக் கப்பல்களுக்கும் அனுமதி உண்டு என்று அவை சொல்கின்றன.
பிரிட்டிஷ் கப்பல் அதன் வழியாகச் சென்றதைச் சீனா கண்டித்தது. கப்பலைப் பின்தொடர்வதற்குச் சீனா அதன் ராணுவத்தை அனுப்பியது.