பொழுதுபோக்கு

வடசென்னையில் புதிய அவதாரம் எடுக்கும் சிம்பு… வெற்றிமாரனின் புதிய பிளான்

வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் ஒரு படம் ரெடியாக போகிறது. பெரும்பாலும் இந்த படம் வடசென்னை இரண்டாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஏற்கனவே வெற்றிமாறன் சைடில் வாடிவாசல் இழுத்துக் கொண்டே போனது. அதுபோல தனுஷும் பிசியாக இருந்தார்.

இதனால் வெற்றிமாறன் குபேரன் பட சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று தனுசை சந்தித்து பேசி உள்ளார். சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண போவதாகவும் கூறியுள்ளார். அதற்கு தனுஷ் தரப்பில் இருந்தும் பச்சைக்கொடி வந்துள்ளது. இதனால் இந்த கூட்டணி விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.

வடசென்னை முதல் பாகத்திலேயே சிம்புவும் நடிக்கவிருந்தது. அந்த படத்தில் நடிகர் கிஷோர் மச்சானாக வரும் குமார் கதாபாத்திரம் முதலில் சிம்பு தான்பண்ணுவதாக அமைத்திருந்தார் வெற்றிமாறன்.

மிகவும் வலுவான அந்த கதாபாத்திரம் துணிச்சலாக கோர்ட் உள்ளேயே சென்று பல அடாவடிகள் செய்யுமாம்.இதனால் சிம்பு இந்த கதாபாத்திரம் பண்ணினால் நன்றாக இருக்கும் என அதை மாஸாக ரெடி பண்ணி வைத்திருந்தார் இயக்குனர் வெற்றி.

ஆனால் அப்பொழுது இந்த கூட்டணி அமைய முடியாமல் போனது. இப்பொழுது விட்ட அந்த குமார் கதாபாத்திரத்தை மீண்டும் பழையபடி உயிர் கொடுத்து, அதிலிருந்து கதையை மீண்டும் சிம்புக்காக வடசென்னை இரண்டாம் பாகத்தில் ரெடி பண்ணி உள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!