அறிவியல் & தொழில்நுட்பம்

Samsung Galaxy ring-2 வெளியீட்டில் சிக்கல்!

முதல் தலைமுறை கேலக்ஸி ரிங் இந்தியாவில் கடந்த அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி ரிங் 2 (Galaxy Ring 2) ஸ்மார்ட் ரிங் ஆனது 2025 ஜூன் (அ) ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கேலக்ஸி எஸ்26 (Galaxy S26) சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு கேலக்ஸி ரிங் 2 வெளியாகக்கூடும் என்று சில தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2025 ஜனவரியில் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25) சீரிஸ் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்கள் இந்த வெளியீடு தாமதமாகும் என்பதைக் குறிக்கின்றன.

கேலக்ஸி ரிங் 2 எப்போது உலகளவில் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்திய அறிக்கைகளின்படி, சாம்சங் கேலக்ஸி ரிங் 2 இன்னும் மேம்பாட்டு நிலையில் உள்ளது மற்றும் 2025-ல் அறிமுகப்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்று தெரிகிறது. நல்ல செய்தி என்னவென்றால், கேலக்ஸி ரிங் 2 உருவாக்கத்தில் உள்ளது. கெட்ட செய்தி என்னவென்றால், கேலக்ஸி ரிங் 2 இன்னும் உருவாக்கத்தில் தான் உள்ளது. ஆக கேலக்ஸி ரிங் 2 ஆனது 2025 இல் அறிமுகம் செய்யப்படாது.

சாம்சங் கிளப் வழியாக கிடைத்த தகவல்களின்படி, சாம்சங் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட் ரிங்கில் வேலை செய்து கொண்டிருக்கிறது. மேலும் சாம்சங்கின் முயற்சிகள் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. மேலும் கேலக்ஸி ரிங் 2 மாடலில் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய வகை பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதுதான் கேலக்ஸி ரிங் 2 வராததற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

கேலக்ஸி ரிங் 2 ஆனது முதல் தலைமுறை மாடலை விட பல மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில,

மெல்லிய வடிவமைப்பு: முந்தைய மாடலை விட மெல்லிய மற்றும் வசதியான வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம்.
மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள்: ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் மேலாக பேட்டரி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட சுகாதார கண்காணிப்பு: மிகவும் துல்லியமான சுகாதார தரவு சென்சார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட AI செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது தூக்கத்தில் மூச்சுத்திணறல் கண்டறிதல் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கலாம்.
முதல் தலைமுறை கேலக்ஸி ரிங் பல்வேறு அளவுகளில் வந்தது போலவே, கேலக்ஸி ரிங் 2 வும் கூடுதல் அளவு விருப்பங்களுடன் வரக்கூடும்.
சென்சார்கள்: முந்தைய மாடலில் இருந்தது போலவே аксе லரோமீட்டர், ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், பெடோமீட்டர் மற்றும் தோல் வெப்பநிலை சென்சார் போன்ற சென்சார்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் எதிர்ப்பு: IP68 மதிப்பீடு அல்லது அதற்கும் மேலான நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டிருக்கலாம்.
டைட்டானியம் போன்ற உயர்தர பொருட்களால் உருவாக்கப்படலாம்.
இணைப்பு: புளூடூத் மற்றும் NFC இணைப்பு அம்சங்கள் இடம்பெறும்.
Samsung Health மற்றும் SmartThings போன்ற சாம்சங் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைப்பு இருக்கும். Find My Ring என்ற அம்சமும் இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ரிங்கில் உள்ள உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களை பொறுத்தவரை, ஸ்லீப் ஸ்கோர் (Sleep Score), ஸ்நோரிங் டேட்டா (Snoring Data) மற்றும் ஸ்லீப் மூவ்மெண்ட், லேடன்சி, ஹார்ட் ரேட் (Heart Rate) மற்றும் ரெசிபிரேட்டரி ரேட் போன்ற பிற அளவீடுகள் உடனான விரிவான ஸ்லீப் அனாலிஸிஸை (Sleep Analysis) வழங்குகிறது.

ஏஐ-பவர்டு அம்சங்களில், சாம்சங் கேலக்ஸி ரிங் ஆனது செல்பீ, டெய்லி ஆக்டிவிட்டி, ஸ்லீப்பிங் ஹார்ட் ரேட் மற்றும் பலவற்றின் அடிப்படையில் உடல் மற்றும் மனநல நிலைமைகளை கண்காணிக்கும் ஆஎனர்ஜி ஸ்கோரை கொண்டு உள்ளது. ஹார்ட் ரேட் அலெர்ட் உடன் ரியல்டைம் ஹார்ட் ரேட் கண்காணிப்பை நிகழ்த்தும் அம்சமும் இதில் அடங்கும்.

சாம்சங் கேலக்ஸி ரிங் அந்த நீங்கள் தேர்வு செய்யும் அளவைப் பொறுத்து 2.3 முதல் 3.0 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். டைட்டானியம் கிரேடு 5 மூலம் உருவாக்கப்பட்டு உள்ள கேலக்ஸி ரிங் ஆனது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்டையும் கொண்டுள்ளது. இது அதிக வெப்பநிலை, கடினமான சூழ்நிலைகள் மற்றும் பலவற்றை தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்