இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாகக் குறித்த சேவைகள் இவ்வாறு மே 23 வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





