மத்திய கிழக்கு

தீவிரப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதலுக்கு மத்தியில் காசாவிற்குள் குறிப்பிட்டளவு உணவை எடுத்து செல்ல இஸ்ரேல் அனுமதி

காஸாவில் பட்டினி ஏற்படுவதைத் தவிர்க்க குறிப்பிட்ட அளவில் உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10 வாரங்களுக்குஉள்ளே எடுத்துச் செல்லப்படுவதை இஸ்ரேல் தடுத்துவைத்திருந்தது.

இஸ்ரேலிய ராணுவப் படைகளின் பரிந்துரைக்கும், ஹமாஸ் தரப்புக்கு எதிராக மீண்டும் தொடங்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் சொன்னது.

காஸாவில் விரிவான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இஸ்ரேலின் அறிவிப்பு வெளிவந்தது.

உணவு, எரிப்பொருள், மருந்துகள் போன்றவற்றின் மீதான தடையை நீக்கும்படி இஸ்ரேலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

காஸாவின் 2.1 மில்லியன் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பட்டினி குறித்து உதவி அமைப்புகள் எச்சரித்தன.

இஸ்ரேல், உடனடியாக, பெரிய அளவில் எந்தத் தடையுமின்றி காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் நோவெல் பேட்டர் கேட்டுக்கொண்டார்.

நிவராணப் பொருள்களின் விநியோகம் ஹமாஸ் வசம் செல்வதையும் இஸ்ரேல் தடுக்க முயலும் என்று குறிப்பிட்டது

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.