இலங்கையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

இலங்கை , ஹம்பரான – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இன்று (1) பிற்பகல் ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
கொழும்புக்கும் கதுருவெலவுக்கும் இடையில் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர், காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 28 times, 1 visits today)