பொழுதுபோக்கு

அந்த படத்தில் யாஷ் நடிப்பதால் தான் நான் நடிக்கவில்லை… ஸ்ரீநிதி அதிர்ச்சி

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.

தமிழில் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பின் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.

தற்போது, நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இதனால் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” ரன்பீர் கபூரும் சாய் பல்லவியும் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடித்து வரும் ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடிக்க ஆடிஷனில் நான் தான் முதலில் கலந்து கொண்டேன்.

தயாரிப்பாளர்களுக்கும் எனது நடிப்பு பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கேஜிஎப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த யாஷ், இந்த படத்தில் ராவணனாக நடிப்பதால் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!