இலங்கை

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இணக்கம்!

இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக் காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதார தடை நீடிக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன்இ பாதுகாப்புவாத வர்த்தகக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லுமாறு இலங்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!