விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இறந்த சால்மன் மீனை ஏந்தியபடி வாதிட்ட ஆஸ்திரேலிய செனட்டர்

ஆஸ்திரேலியாவின் உத்தேச மீன்பண்னைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பெரிய சால்மன் மீன் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தூக்கிக் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரீன் அரசியல் கூட்டணியைச் சேர்ந்த சாரா ஹான்சன்-யங் எனப்படும் அந்தப் பெண் உறுப்பினர், அரசாங்கத்தின் உத்தேச மீன்பண்ணைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
நச்சுத்தன்மை வாய்ந்த, மாசுபடுத்தும் சால்மன் மீன் தொழிலை ஆதரிப்பதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசாங்கம் விட்டுத்தருகிறதா என்று அவர் புதன்கிழமை (மார்ச் 26) மன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சுற்றுச்சூழல் அமைச்சரைப் பிரதிநிதித்து நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த ஜென்னி மெக்அலிஸ்டரை நோக்கி, பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்ட, உயிரிழந்த பெரிய சால்மன் மீன் ஒன்றை எடுத்துக் காட்டினார்.
தாஸ்மானிய மாநிலத்தில் மரபுடைமைப் பட்டிலில் இடம்பெற்று உள்ள, சர்ச்சைக்குரிய சால்மன் பண்ணையைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் சட்டம் கொண்டு வர உத்தேசித்து உள்ளது.
எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதற்கான சட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற அரசாங்கம் முயன்று வருகிறது.
அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருவாட்டி சாரா, “தேர்தல் நெருங்கும் வேளையில் அழுகிய, நாற்றமெடுக்கும் சால்மன் மீனுக்காக அரசாங்கம் சுற்றுச்சூழல் நற்பெயரை விற்றுவிட்டதா,” என்று கடுமையாகக் கூறினார்.