இலங்கை – மஹிந்தவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையை முறையான மதிப்பீடு இல்லாமல் 60 அதிகாரிகளாகக் குறைக்க புதிய அரசாங்கம் தீர்மானித்தது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
(Visited 16 times, 1 visits today)