இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்த சஜித்

நாடாளுமன்றத்திற்கு அருகில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் குழுவிடம், அவர்களின் தேவைகள் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பேசினார்.
அரசாங்க வேலைவாய்ப்புகளை கோரி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசிய வேலையற்ற பட்டதாரிகள், கடந்த தேர்தலின் போது, அரசாங்கம் வேலை வழங்குவதாக உறுதியளித்திருந்தது, ஆனால் இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறினர்.
மேலும், தாங்கள் உட்பட சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் சிக்கித் தவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவற்றுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விடயம் குறித்து முன்னர் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தாலும், அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பொறுப்பான தரப்பினரிடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றார்.
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினைக்கு இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.