புதிய கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடித்த ஆராச்சியாளர்கள் – தடுக்க மருந்து இல்லை

வௌவால்களின் வாய் மற்றும் மலக்குடல் பகுதிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸ் ஒன்றை பிரேசில் மற்றும் ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய வைரஸ், MERS எனப்படும் கொரோனா வைரஸுடன் நெருக்கமாக தொடர்புடையது. MERS, பாதிப்புக்குள்ளானவர்களில் 35% பேரை கொல்லக்கூடியது.
இந்த புதிய வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் அமைப்பு, மனித செல்களை பாதிக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸ், மற்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஆறு வைரஸ்களும் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் மனித செல்களை பாதிக்கும் திறன் கொண்டதா என்பதை கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு இதுபோன்ற சோதனைகளே காரணம் என்பதால், இந்த ஆராய்ச்சி குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
இந்த கண்டுபிடிப்பை பற்றி பிரேசிலின் சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் புருனா சில்வரியோ கூறுகையில்,
“இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கும் திறன் கொண்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இந்த வைரஸின் ஸ்பைக் புரோட்டீன், MERS-CoV போன்று மனித செல்களுடன் இடைவினை புரியும் திறன் கொண்டது என்பதை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு ஹாங்காங்கில் மேலும் சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
MERS என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடையேயும் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இது காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கடுமையான நிலையில் இது மரணத்திற்கும் வழிவகுக்கும். இதுவரை அமெரிக்காவில் இரண்டு நோயாளிகள் மட்டுமே MERS-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த நோய்க்கு எந்த தடுப்பூசியும் கிடைக்கவில்லை. உலகளவில், MERS-ஆல் 2,613 நோயாளிகள் பாதிக்கப்பட்டு, 943 பேர் உயிரிழந்துள்ளனர்.