இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்காவை விட்டு வெளியேறிய தமிழ் மாணவி: பின்னணி என்ன…!

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த இந்திய ஆராய்ச்சி மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்ததுள்ளது. இதன் காரணமாக குறித்த மாணவி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா சென்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்தவர் ரஞ்சனி ஸ்ரீனிவாசன்.இவர் எப்1 மாணவர் விசா பெற்று அமெரிக்கா, கொலம்பியா பல்கலையில் நகர்ப்புற திட்டமிடலில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

இந்த மாணவி இஸ்ரேல் தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் அமைப்புக்கும் எதிரான போராட்டத்திலும் பங்கேற்றார். ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ரஞ்சனி ஸ்ரீனிவாசன் செயல்பட்டு வந்ததால், அவரது விசாவை அமெரிக்கா அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவர், தாமாக முன்வந்து அமெரிக்காவில் வெளியேறினார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அமெரிக்கா அரசின் செயலியிலும் அதனை ரஞ்சனி ஸ்ரீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அந்நாட்டு அரசு கைது செய்து கை விலங்கு போட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்திய மாணவி தாமாக முன்வந்து வெளியேறி உள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்