பொழுதுபோக்கு

விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கேட்ட சம்பளம் – பத்திரிகையாளர் வெளியிட்ட ரகசியம்

நடிகர் சீயான் விக்ரம் தற்போது படத்தில் நடிக்க கேட்கும் சம்பளம் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் கூறினார்கள். ஆனாலும் உலகளவில் பாராட்டுகளை பெற்றது.

இதை தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் படம்தான் வீர தீர சூரன் பார்ட் 2. இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இப்படம் இம்மதம் இறுதியில் வெளிவரும் என கூறப்படுகிறது. இதன்பின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது புதிய படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விக்ரமை தங்களது திரைப்படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் வரிசையில் உள்ளனர். இதனால் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.

ஆனால், இறுக்கி பிடித்து பேசினால் ரூ. 45 அல்லது ரூ. 40 கோடி சம்பளத்திற்கு கூட விக்ரம் ஓகே சொல்ல வாய்ப்புள்ளதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!