அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை முதல் முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்திய வடகொரியா!

வட கொரியா முதன்முறையாக கட்டுமானத்தில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை காட்சிப்படுத்தியுள்ளது.
இது தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆயுத அமைப்பாகும்.
அணுசக்தியால் இயங்கும் மூலோபாய வழிகாட்டப்பட்ட ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்” என்ற தலைப்பில் அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல் குறித்த விவரங்களை வழங்கவில்லை, கடற்படைக் கப்பல் 6,000 டன்-வகுப்பு அல்லது 7,000 டன்-வகுப்பு கொண்ட ஒன்றாகத் தெரிகிறது.
இது சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடியது என்று சியோலின் ஹன்யாங் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் மூன் கியூன்-சிக் கூறியுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)