பொழுதுபோக்கு

சிவாஜியின் அன்னை இல்லம் பிரபுவுக்குத்தான் சொந்தம்… அதிரடி திருப்பம்

நடிகர் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் படம் தயாரிக்க வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை 30% வட்டி உடன் தற்போது 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக செலுத்தவேண்டும்.

அதற்கு பதில் ஜகஜால கில்லாடி பட உரிமையை கேட்டார் பைனான்சியர், ஆனால் பட பணிகள் முடியவில்லை என அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது துஷ்யந்த் தரப்பு.

அதன் பின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தான் நீதிமன்றம் ஜப்தி உத்தரவை பிறப்பித்தது.

அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் வந்தது.

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தான் துஷ்யந்த். அவருக்கு அன்னை இல்லத்தில் எந்த பங்கும் இல்லை, அந்த வீடு முழுக்க முழுக்க பிரபுவுக்கு சொந்தமானது என ராம்குமார் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.

சிவாஜியின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து ஜப்திக்கு ஏதிராக மனு தாக்கல் செய்ய நீதிபதி ஒப்புதல் அளித்திருக்கிறார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்