இலங்கை: மித்தெனிய முக்கொலை சம்பவம் : மற்றுமொரு சந்தேகநபர் கைது!

மித்தெனிய முத்தரப்பு கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
37 வயதான சந்தேக நபர் மூன்று கொலைக்கு உதவியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹகுருவெல பிரதேசத்தை சேர்ந்தவர். இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)