செய்தி விளையாட்டு

AUSvsSL – ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை அணி

இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினார்கள்.

5வது வீரராக களம் இறங்கிய கேப்டன் சரித் அசலங்கா களத்தில் நின்றார்.

அடுத்து இஷான் மலிங்கா களம் இறங்கினார். இவரை ஒரு முனைவில் வைத்துக் கொண்டு மறுமுனையில் அசலங்கா சிறப்பாக விளையாடினார்.

43வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து சதம் அடித்தார் அசலங்கா. அப்போது மறுமுனையில் மலிங்கா 20 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

பின்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் 126 பந்தில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அசலங்கா ஸ்கோரில் 14 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும்.

அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 214 ரன்னாக இருந்தது. கடைசி விக்கெட்டும் அதே ரன்னில் இழக்க இலங்கை 46 ஓவரில் 214 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மட்டும் தாக்குப்பிடித்து 41 ரன்கள் அடித்தார். ஆரோன் ஹார்டி 32 ரனக்ளும், சீன் அபோட் 20 ரன்களும், ஆடம் ஜம்பா 20 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 33.5 ஓவரில் 165 ரன்னில் சுருண்டது.

இதனால் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீக்ஷனா 9.5 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெலாலாகே, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி