ஜெர்மனியில் அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

ஜெர்மனியில் போலியோ வைரஸின் தாக்கம் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுகாதார அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலியோ அல்லது குழந்தை பக்கவாதம் என்றும் அழைக்கப்படும் தொற்று நோயான போலியோமைலிடிஸ், சர்வதேச தடுப்பூசி பிரச்சாரங்கள் மூலம் பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
எனினும் பல ஜெர்மன் நகரங்கள் தற்போது போலியோ பாதிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
மியூனிக், பான், கொலோன், ஹாம்பர்க், டிரெஸ்டன், டுசெல்டார்ப் மற்றும் மைன்ஸ் உள்ளிட்ட கழிவுநீரில் ஆபத்தான அளவு போலியோ வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்டட்கார்ட் மற்றும் பெர்லினில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் இப்போது நேர்மறையான சோதனைகள் பதிவாகியுள்ளன என்று ரொபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெர்லினில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திற்கும் டிசம்பர் மாதம் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட காலத்திலிருந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.