இலங்கை

இலங்கை: பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக புதியவரை நியமிக்கக் கோரிக்கை!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் பதவிக்கு உரிய அதிகாரியொருவரை சட்டரீதியாக நியமிக்குமாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரியுள்ளது.

ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு 6 மாத சேவை நீடிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த காலம், அடுத்த மாதம் நிறைவடையவுள்ளதாகவும் அந்த சங்கம் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, பதவியில் உள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் எதிர்ப்பினை வெளியிடும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், குறித்த பதவிக்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் உள்ளதாகவும், அந்தப் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் உரிய அதிகாரியை நியமிக்க வேண்டும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை நிபுணர்கள் சங்கம் கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வலியுறுத்தியுள்ளது.

 

(Visited 70 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!