இந்தியா

இந்தியா – கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 11 பாஜக நிர்வாகிகள் நீக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக நிர்வாகிகள் 11 பேர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அக்கட்சி அவர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 230 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.

காங்கிரஸ் – சிவசேனை (உத்தவ்) – தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணி தோல்வியடைந்தது. பாஜக கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் சில இடங்களில் கட்சியின் அதிகாரபூா்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்குவது, தோ்தலில் கட்சிக்கு எதிராக செயல்படுவது போன்றவை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக மாநில பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதன்படி அகோலா மாவட்டத்தில் 11 பாஜக நிா்வாகிகள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கையை பாஜக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 67 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!