இலங்கை செய்தி

பெருந்தலைவர் எனும் பேச்சுக்கே இடமில்லை யாப்பிலும் அப்படி எதுவுமில்லை

மாவை சேனாதிராஜா கட்சியின் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டாரென செய்திகள் வந்துள்ளன.

அரசியல் குழு தலைவராக இரா.சம்பந்தனை நியமித்தபோதும் பெருந்தலைவர் என்றே அழைத்தோம்.

அவ்வாறு மாவை சேனாதிராஜாவை அழைப்போமென நான் பிரேரித்திருந்தேன். ஆனால், கட்சியின் யாப்பிலே அப்படி ஒரு பதவி இல்லை.

எனவே யாப்பின்படி நாங்கள் செல்ல வேண்டுமென சிறிதரன் கூறிய காரணத்தினால் பெருந்தலைவர் என்ற சொற்பதத்தை நாங்கள் உபயோகிக்கவில்லையென தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம் எ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ,அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. எனவே மாவை சேனாதிராஜா தனது பதவியிலிருந்து விலகுவதற்கு பூரண சுதந்திரம் இருந்தது.

அதனை உபயோகித்து அவர் கடந்த ஒக்டோர்பர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒரு பதவி வெற்றிடமானால் அதனை நிரப்பவேண்டிய பொறுப்பு கடமை, அதிகாரம் மத்திய செயற்குழுவுக்கே இருக்கிறது.

அதனையே கட்சி இன்று செய்துள்ளது. தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதாக அவர் வாய்மொழி ஊடாகவோ எழுத்து மூலமாகவோ அறிவிக்கவில்லை.

அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனவே அதன்பின்னரே கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று செயலாளர் அவருக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை சிவஞானம் பதில் தலைவராக செயற்படுவார் என்பது ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சில திருத்தங்கள் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு தாம், இணங்கவில்லை என்றவாறான கருத்தை சிவமோகன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அவர் கூட்டத்திலே இருந்ததுடன் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

கட்சியின் 75 ஆவது வருட நிறைவை முன்னிட்டு, பவள விழாவாக அதனை கொண்டாடுவதற்கு மாவட்டம் தோறும் நினைவு கூட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.

அதனை பெருவிழாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

அதனையிட்டு மலர் ஒன்றும் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மலர் குழுவுக்கு மாவை சேனாதிராஜா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழாக்குழுவின் தலைவராக கட்சியின் தலைவராக செயற்படும் சிவிகே. சிவஞானத்தை நியமித்துள்ளோம்.

அதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட குழுவுடன் இணைந்து செய்வதாக மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என்றார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை