இந்தியா செய்தி

பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டதால் நக்ரோடா மற்றும் உதம்பூரிலிருந்து, காஷ்மீர் செல்லும் வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

நெடுஞ்சாலையில் இருந்து இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பனிப்பொழிவு அதிகரித்ததால், வாகனங்களை பனிக்கட்டிகள் மூடின. டோடா மற்றும் ஆனந்த்நாக் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடமே தெரியாமல், பனிக்கட்டிகளால் சூழப்பட்டன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!