பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய போட்டியாளர்… எதிர்பாராத நிகழ்வு

கடந்த 7 சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த உலக நாயகன் கமல் ஹாசன், தன்னுடைய சொந்த பணி காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். எனவே தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில்… இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்கி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்சை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீஸ் டாஸ்க் மூலம் அவர்களுடைய குடும்பத்தினரை வீட்டிற்குள் அனுப்பி வைத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.

அதே போல் சௌந்தர்யாவின் கிரஷ் விஷ்ணு, அருண் பிரசாத்தின் காதலியான அர்ச்சனா ரவிச்சந்திரன், விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் பேச்சாளர் மகேஷ், பவித்ராவின் தோழி உட்பட நேற்று ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையை அணைத்து போட்டியாளர்களும் கொண்டாடினர்.

இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றபோதும், எலிமினேஷன் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத ஒன்று. அதன்படி இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து சற்று முன் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து, 12 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில், மீதம் 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ளனர். இந்த 12 போட்டியாளர்களில் இருந்து இந்த வாரம் விஜய் டிவி ‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அன்ஷிதா அஞ்சி தான் வெளியேறியுள்ளர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்… இந்த வாரம் டபிள் எவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

(Visited 29 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content