ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இரண்டு குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்

நவாப்ஷாவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்த சோகமான சம்பவம் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுளள்து.

கோமல் ஷேக் என்ற தாய் காவலில் வைக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையின் போது, ​​தாய் தன் குழந்தைகளை தனி அறைகளில் கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்படுள்ளது.

கொலைக்கான ஆயுதத்தை மீட்டுள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த குழந்தைகள் 2 வயது ஜைன் மற்றும் 4 வயது ரபியா என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

(Visited 46 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!