உலகம்

பிரேசிலில் லாட்டரியில் மில்லியன் பவுண்டுகளை வென்ற நபர் மாரடைப்பால் மரணம்!

பிரேசிலின் மிகப்பெரிய லாட்டரியில் 26.5 மில்லியன் பவுண்டுகளை வென்ற ஒருவர் பல் சிகிச்சைக்காக பணத்தை செலவழித்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.

மாட்டோ க்ரோஸ்ஸோவைச் சேர்ந்த கால்நடை விவசாயி அன்டோனியோ லோப்ஸ் சிக்வேரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாட்டரி சீட்டில் ஜாக்பாட்டை வென்றார்.

அவரது வெற்றியைத் தொடர்ந்து, அவர் பணத்தில் ஒரு பகுதியை பல் சிகிச்சைக்காக செலவிட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் இறக்கும் போது திரு சிக்வேரா நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டதாகவும், அவரை உயிர்ப்பிக்க முயற்சித்த போதிலும், அவர் இறந்துவிட்டதாகவும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

உள்ளூர் காவல்துறையின் தலைவர் எடிசன் பிக், இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!